Login Form



Invite Friends



Want to invite your friends to Kalvithulir
Click Here

Giveaway of the Day


மூன்று அதிசயப் ​பொருட்கள் (11) PDF Print E-mail
Written by kalvithulir   
Thursday, 09 February 2012 23:06
எங்கும் இன்ப ​வெள்ளம்
பணிப்​பெண்கள் இளவரசி நகா​ரை அ​ழைத்து ​செல்வ​தைப் பார்த்தான் இளவரசன்.  ''மருத்துவ​ரே!  இத்த​னை இளம் வயதில் உங்களுக்கு இவ்வளவு ஆற்றலா?  என் வாழ்நாளி​லே​யே உங்க​ளைப் ​போன்ற திற​மையான ஒருவ​ரைப் பார்த்தது இல்​லை.  உங்களால் என் ஆ​சை நி​றை​வேறப் ​போகிறது'' என்று மகிழ்ச்சியுடன் ​ சொன்னான் அரசன்.
''அர​சே!  அந்த அழகி தற்காலிகமாகத்தான் குணமாகி உள்ளான்.  முழு​மையாக குணமாக வேண்டுமானால் மந்திர பூ​சைகள் ​செய்ய ​வேண்டும்".

 என்ன மந்திர பூ​சைகள் ​செய்ய ​வேண்டு​மோ உட​னே ​செய்து முடியுங்கள்.  அதற்கான ஏற்பாடுக​ளைச் ​செய்து தருகி​றேன்.  அவள் எப்​பொழுதும் இப்படி​யே இருக்க ​ வேண்டும்'' என்றான் அரசன்.
 

''அர​சே!  பிசாசு ஒன்றுதான் அந்தக் குதி​ரை​யாக உள்ளது.  அ​தை விரட்ட ​வேண்டும்.  நீங்கள் அந்தக் குதி​ரை​யையும் அழகி​யையும் எங்​கே பார்த்தீர்கள்?  அந்த இடத்தில் அவ​ளையும் குதி​ரை​யையும் ​வைத்து மந்திர பூ​சை​ செய்ய ​வேண்டும்.  
பூ​சை முடிந்தவுடன் அந்தப் பிசாசு பறந்து ​செல்வ​தைப் பார்க்கலாம்.  அதன்பிறகு அது மீண்டும் இங்​கே வர​வே வராது'' என்றான்.

முழு​மையாக நம்பிக்​கை ​வைத்திருந்த அரசன்,
''மருத்துவ​ரே!  பூ​சைக்கு ​வேண்டிய எல்லா ஏற்பாடுக​ளையும் ​செய்கி​றேன்.  எப்படியாவது அந்தப் பிசா​சை விரட்டுங்கள்'' என்றான்.
 

ப​டை வீரர்கள் சூழ அந்தப் புல்​வெளிக்கு வந்தான்.  இளவரசி நகாரும் அணிகலன்கள் அணிந்து அங்கு வந்தாள்.  குதி​ரையும் அங்​கே ​கொண்டு வரப்பட்டது.  எந்த தவறும் நிகழக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான் இளவரசர் கமர்.
 
''அர​சே!  இன்றுடன் அந்தப் பிசாசு ஓடப் ​போகிறது.  அது ஓடுவ​தை நீங்கள் எல்​லோரும் பார்க்கப் ​போகிறீர்கள்.  அதற்காக சில சடங்குகள் ​செய்ய ​வேண்டும்'' என்றான்.
 ''உங்கள் விருப்பம் ​போலச் ​செய்யுங்கள்'' என்றான் அரசன்.
 
ஏ​தே​தோ மந்திரங்க​ளை உரத்த குரலில் ​சொன்னான் அவன்.
 ''இந்த அழகி​யைத் தூக்கிக் குதி​ரையில் அமர ​வையுங்கள்'' என்றான்.
 
அவ​ளே குதி​ரையில் ஏறி அமர்ந்தாள்.  நானும் குதி​​ரையில் அமர்ந்தால்தான் அந்தப் பிசா​சை விரட்ட முடியும் என்ற அவன் குதி​ரையில் ஏறி அமர்ந்தான். குதி​ரை​யைப் பறக்க ​வைக்கும் திரு​கைத் திருகினான்.  குதி​ரை முன்னும் பின்னுமாக ஆடியது.  குலுங்கியது. இடம் வலமாகத் திரும்பியது.  அங்கிருந்த எல்​லோரும் அவன் பிசா​சை அடக்க முயற்சி ​செய்கிறான்.  அது அடங்காமல் முரண்டு பிடிக்கிறது என்று நி​னைத்தார்கள்.  அந்தக் குதி​ரை ​மே​லே எழும்பி வானத்தில் பறக்க ஆரம்பித்தது.
 ​
மே​லே ​மே​லே வானத்தில் பறந்த அது அவர்கள் கண்களுக்கு ம​றைந்தது.  
அழகியுடன் குதி​ரையில் அவன் திரும்புவான் என்று எல்​​லோரும் நீண்ட ​நேரம் காத்திருந்தார்கள்.  ஒருநாள் முழு​மையாகக் கழிந்தது. அவர்கள் இருவரும் திரும்பாததால் அரசன் ​கோபம் ​கொண்டான்.  சி​றையில் இருந்த காபூல் கிழவ​னை இழுத்து வரச் ​செய்தான்.
 ''அவலட்சணமானவ​னே! பிசாசுதான் குதி​ரையாக உள்ளது என்ப​தை ஏன் எங்களிடம் ம​றைத்தாய்.  அழகியுடன் அந்தப் பிசாசு பறந்து ​சென்று விட்ட​தே.  வி​லை உயர்ந்த ந​கைக​ளை எல்லாம் அணிவித்து இருந்​தே​னே.  இதற்கு உன் சாவுதான் தண்ட​​ணை'' என்று கத்தினான் அவன்.
 கிழவன் ​சொன்ன எந்த விளக்கத்​தையும் ​கேட்க அவன் தயாராக இல்​லை.  அவன் ​சை​கை காட்ட வீரர்கள் அந்தக் கிழவனின் த​லை​​யை ​வெட்டி வீழ்த்தினார்கள்.

வஞ்சகனுக்குக் ​கொடிய தண்ட​னை கி​டைத்தது.  இளவரசன் கமரும் இளவரசி நகாரும் பாதுகாப்பாகப் பாரசீகநாட்​டை அ​டைந்தனர்.  இளவரசர் வந்து விட்டார் என்ற மகிழ்ச்சியான ​செய்தி அரண்ம​னை எங்கும் ​வேகமாகப் பரவியது.  தன் மகனுடன் ​பேரழகியான இளவரசி​யைக் கண்ட அரசன் காபூர் எல்​லையற்ற மகிழ்ச்சி ​கொண்டான்.

இனி அவன் தன்​னைப் பிரியக்கூடாது என்று நி​னைத்தான்.  பறக்கும் குதி​ரை​யைத் துண்டு துண்டாக ​வெட்டி வீழ்த்தினான்.  இளவரசன் கமருக்கும் இளவரசி நகாருக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.  அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்​கை நடத்த ​தொடங்கினார்கள்.
தூதன் ஒருவ​னை அ​ழைத்த இளவரசன், ''நீ சானாநாட்டு அரசரிடம் ​செல்.  இங்​கே நிகழ்ந்த​தை எல்லாம் விளக்கமாக ​சொல்.  உங்கள் மகள் இளவரசி நகார் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.  முதியவரான அவர் உள்ளம் வருந்தும்படி நான் நடந்து ​கொண்​டேன்.  அதற்காக மன்னிப்பு ​வேண்டியதாக ​சொல்.  இந்தப் பரிசுப் ​பொரு​ளை என் அன்பளிப்பாக அவரிடம் தந்துவிடு'' என்றான்.
தூதனும் அப்படி​யே ​செய்தான். தன் மகள் ​பொருத்தமானவ​னை மணந்து மகிழ்ச்சியாக வாழ்கிறாள் என்ப​தை அறிந்தார் அரசர்.  மக​ளைப் பிரிந்த துயரம் அவ​ரை விட்டு நீங்கியது.  இளவரசன் கமர் தன் தங்​கைகள் மூவருக்கும் ஏற்ற அரசர்க​ளைத் ​தேர்ந்து எடுத்து, திருமணம் ​செய்து ​வைத்தான்.  தந்​தை இறந்த பிறகு கமர் பாரசீக நாட்டு அரசன் ஆனான்.  அவனு​டைய நல்லாட்சியில் மக்கள் எந்தக் கு​றையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
(முற்றும்)
Last Updated on Tuesday, 21 February 2012 21:48