Login Form



Invite Friends



Want to invite your friends to Kalvithulir
Click Here

Giveaway of the Day


மூன்று அதிசயப் ​பொருட்கள் (9) PDF Print E-mail
Written by kalvithulir   
Thursday, 09 February 2012 22:49

தேடித் ​தேடி அ​லைந்​தே​னே

 

பல மணி ​நேரம் பறந்ததால் காபூல் கிழவன் க​ளைப்பு அ​டைந்தான். 

ஓய்வு எடுப்பதற்காக தகுந்த இடத்​தை வானத்தில் பறந்தபடி​யே ​தேடினான்.  ​பொய்​கை சூழ்ந்த அழகிய புல்​வெளி ஒன்று அவன் கண்ணில்பட்டது.  குதி​ரை​யை அங்​கே இறக்கினான் அவன். 

 

அழுதபடி​யே இளவரசியும் குதி​ரையிலிருந்து இறங்கினாள்.  அவன் ​சொன்ன ஆறுதல் எ​தையும் ​கேட்கிற நி​லையில் அவள் இல்​லை.  புலம்பிக் ​கொண்​டே இருந்தாள்.  அந்தப் புல்​​வெளி முனிபா நாட்டுத் த​லை நகரத்துக்கு அரு​கே இருந்தது.  அந்த நாட்​டைக் ​கொடுங்​கோல் அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்.  ​பொழுது ​போக்குவதற்காக அவன் தன் வீரர்களுடன் அப்​பொழுது அந்தப் புல்​வெளிக்கு வந்தான். 

 

​பேரழகியான ஒருத்தி அழுவ​தையும் அவலட்சணமான கிழவன் ஒருவன் அரு​கே இருப்ப​தையும் பார்த்தான். 

 

அவ​ளைப் பார்த்து அவன், ''அழகி​யே!  இந்த அவலட்சணமான கிழவனுக்கு உன்​னை மணமுடித்து இருக்கிறார்க​ளே.  உன் ​பெற்​றோர்களுக்கு உன் ​மேல் அன்பு இல்​லையா?'' என்று ​கேட்டான்.

 

குறுக்கிட்ட கிழவன், ''அர​சே! இவள் என் மு​றைப்​பெண்.  அதனால் எங்களுக்குத் திருமணம் நடந்தது'' என்றான். 

 

''அர​சே! இவன் ​சொல்​வதை நம்பாதீர்கள்.  இவன் மந்திரவாதி.  சூழ்ச்சி ​செய்து என்​னை இங்​கே தூக்கி வந்திருக்கிறான்.  இதற்கு முன் இந்த அருவருப்பான முகத்​தை நான் பார்த்த​தே இல்​லை'' என்று புலம்பினாள் அவள். 

 

''வீரர்க​ளே!  ​பொய் ​சொன்ன இந்தக் கிழவ​னை மயக்கம் அ​டையும் வ​ரை அடித்துத் துன்புறுத்துங்கள்.  அதன்பிறகு சி​றையில் அ​டையுங்கள்'' என்று கட்ட​ளையிட்டான் அரசன். 

 

''ஐ​யோ!  இப்படி ஆபத்தில் சிக்கிக் ​கொண்​டே​னே.  என்ன ​செய்​வேன்''  என்று நடுங்கினான் கிழவன்.  அவ​னை அடித்து உ​தைத்த வீரர்கள் சி​றையில் அ​டைத்தார்கள்.  இளவரசி நகா​ரைத் தன்னுடன் அரண்ம​னைக்கு அ​ழைத்து ​சென்றான் அரசன்.  குதி​ரையும் பாதுகாப்பாக அரண்ம​னையில் ​வைக்கப்பட்டது. 

 

அவள் அழகில் மயங்கிய அவன், ''உன்​னை நான் திருமணம் ​செய்து ​கொள்கி​றேன்.  பட்டத்து அரசியாக என்னுடன் அரிய​ணையில் அமரலாம்.  இங்​கே ​செல்வத்திற்குக் கு​றை​வே இல்​லை.  உன் விருப்பம் ​போல் மகிழ்ச்சியாக இருக்கலாம்.  என்ன ​சொல்கிறாய்?'' என்று​ கேட்டான்.

 

​வேடனிடம் தப்பிப் பருந்திடம் சிக்கிக் ​கொண்​டே​னே என்று வருந்தினாள் அவள்.  அங்​கே இளவரசன் கமர் காதலி​யைத் ​தேடி நாடு நாடாக அ​லைந்தான்.  ஊர் ஊராகத் ​தேடினான்.  சந்தித்தவர்களிடம் எல்லாம் பறக்கும் குதி​ரையில் அழகி ஒருத்தியும் கிழவன் ஒருவனும் ​சென்ற​தைப் பார்த்தீர்களா?  என்று ​கேட்டான்.  பலர் அவ​னைப் ​பைத்தியம் என்று நி​னைத்தார்கள்.  சிலர் அப்படி எதுவும் நாங்கள் ​கேள்விப்படவில்​லை என்றார்கள். ​பெற்​றோர்களுடன் இளவரசி ​சேர்ந்து இருப்பா​னோ என்று சானா நாட்டிற்குச் ​சென்றான்.  அங்கும் அவ​ளைப் பற்றிய ​செய்தி எதுவும் கி​டைக்கவில்​லை. 

 

இருந்தும் அவ​ன் முயற்சி​யை விடவில்​லை.  தான் சந்தித்த ஒவ்​வொருவரிடமும் விசாரித்துக் ​கொண்டிருந்தான்.  ஓர் இரவு அவன் சத்திரம் ஒன்றில் தங்கினான்.  பல நாடுகளில் இருந்து வந்த வணிகர்கள் பலர் அங்​கே தங்கியிருந்தனர்.  அவர்களில் ஒருவர், ''நீங்கள் ​சென்ற நாடுகளில் ஏ​தேனும் அதிசயம் உண்டா?'' ​சொல்லுங்கள் ​கேட்​போம்.  ​பொழுது ​போகும் என்றார்.

 

அதற்கு இன்​னொருவர், ''நான் வணிகப் ​பொருட்களுடன் முனிபா நாட்டிற்குச் ​சென்​றேன்.  அந்நாட்டு அரசன் ​வேட்​டையாட ​சென்றானாம்.  ஓரிடத்தில் ​பேரழகி ஒருத்தியும் அவலட்சணமான கிழவன் ஒருவனும் இருந்தார்களாம்.  அவர்களுடன் தந்தத்தாலான அழகிய குதி​ரை ஒன்றும் இருந்ததாம்'' என்றார். 

 

மகிழ்ச்சியால் துள்ளிய இளவரசன் கண்டிப்பாக அவள் இளவரசி நகார் தான் என்று அங்கிருந்து புறப்பட்டான்.  பல நாட்கள் பயணத்திற்குப் பின் முனிபா நாட்​டை அ​டைந்தான்.  த​லை நகரத்திற்குள் ​செல்ல முயன்றான்.  புதிதாக யார் த​லை நகரத்திற்குள் நு​ழைந்தாலும் அவர்க​ளை அரசன் முன் நிறுத்துவார்கள்.  அரசன் விசாரித்து அனுமதி தந்த பின்தான் நகரத்திற்குள் நு​ழைய முடியும். 

 

இது அந்நாட்டு வழக்கமாக இருந்தது.  வாயிலில் காவல் இருந்த வீரர்கள் இளவரச​னை நிறுத்தினார்கள்.  மா​லை ​நேரமாகிவிட்டது.  இன்று இவ​னை அரசரின் முன் நிறுத்த முடியாது.  இன்றிரவு இவ​னைச் சி​றையில் வைப்​போம்.  கா​லையில் அரச​வைக்கு அ​ழைத்து​ செல்​வோம் என்றான் வீரர் த​லைவன்.

 

அதன்படி​யே சி​றைச்சா​லைக்கு அவ​னை அ​ழைத்து ​சென்றார்கள். 

அவனின் ​பெருமிதமான​ தோற்றத்​தை சி​றைக் காவலர்கள் பார்த்தார்கள்.  இவன் உயர்ந்த குடும்பத்​தைச் ​சேர்ந்தவனாக ​வேண்டும்.  குற்றவாளி ​போல இவ​னைச் சி​றைக்குள் அ​டைக்க ​வேண்டாம்.  நம்முடன் இர​வைக் கழிக்கட்டும் என்று முடிவு ​செய்தார்கள்.  அவர்களிடம் ​பேச்சுக் ​கொடுத்தான் இளவரசன் கமர். 

 

தன் ​பேச்சுத் திற​மையால் அவர்கள் எல்​லோ​ரையும் கவர்ந்தான். 

இனி அவர்களிடம் எல்லாவற்​றையும் விசாரித்து ​தெரிந்து ​கொள்ளலாம் என்று நி​னைத்தான் அவன்.  ​பேரழகி ஒருத்திக்கும் உங்கள் அரசருக்கும் திருமணம் என்று ​கேள்விப்பட்​டே​னே என்றான்.  திருமணம் நடந்திருக்க ​வேண்டியதுதான். 

 

திடீ​ரென்று அந்தப் ​பேரழகிக்குப் ​பைத்தியம் பிடித்துவிட்டது.  அவ​ளைக் குணப்படுத்த மருத்துவர்கள் முயற்சி ​செய்கிறார்கள்.  வி​ரைவில் எங்கள் அரசருக்கும் அவளுக்கும் திருமணம் நிகழும் என்றான் ஒரு வீரன்.  மகிழ்ச்சி​யை அடக்கிக் ​கொண்​டே இளவரசன் கமர் அவளுடன் கிழவன் ஒருவனும் குதி​ரை ஒன்றும் இருந்ததாகச் ​சொன்னார்க​ளே என்று இழுத்தான்.  அந்தக் கிழவன் இங்​கேதான் சி​றைக்குள் துன்பப்பட்டுக்​ கொண்டு இருக்கிறான். 

குதி​ரை அரண்ம​னையில் பாதுகாப்பாக உள்ளது என்றான் இன்​னொரு வீரன்.

 

(தொடரும்)

Last Updated on Thursday, 09 February 2012 23:04