Login Form



Invite Friends



Want to invite your friends to Kalvithulir
Click Here

Giveaway of the Day


மூன்று அதிசயப் ​பொருட்கள் (5) PDF Print E-mail
Written by kalvithulir   
Wednesday, 18 January 2012 21:52

இளவரசன் தப்பித்தான்

 

அடி​மை ஒருவ​னை அ​ழைத்தார் அரசர், ''நீ முதல் அ​மைச்சரிடம் ​செல்.  நா​ளை கா​லையில் நம் வீரர்கள் அ​னைவரும் அரண்ம​னை முன் அணிவகுத்து நிற்க ​வேண்டும்.  அதற்கான ஏற்பாடுக​ளை ​செய்யச் ​சொன்னதாகச் ​சொல்'' என்றார். 

 

அவ​ரை வணங்கிவிட்டு அந்த அடி​மையும் அங்கிருந்து ​சென்றான். அதன்பிறகு அவர் இளவரசன் கமருடன் ​பேசிக் ​கொண்டிருந்தார்.  அவனின் ​பேச்சுத் திற​மையும், நற்பண்புகளும் அவ​ரைக் கவர்ந்தன.  அழகான ​இளைஞனான இவன் நா​ளை கா​லையில் சாகப் ​போகிறான் என்று தனக்குள் வருந்தினார் அவர்.  மறுநாள் ​பொழுது விடிந்தது.  வழக்கம் ​போல அரிய​ணையில் அமர்ந்தார் அவர்.  உருவிய வாளுடன் மாவீர​னைப் ​போல இளவரசன் கமர் அரச​வைக்கு வந்தான். 

 

''அ​வை​யோர்க​ளே!  இந்த   இளைஞன் என் மக​ளைத் திருமணம் ​செய்து ​கொள்ள விரும்பினான்.  நீ மாவீரன் என்ப​தை நிரூபி உனக்கும் இளவரசிக்கும் திருமணம் ​செய்து ​வைக்கி​றேன் என்​றேன். 

 

அதற்கு அவன், ''உங்கள் ப​டை வீரர்கள் அ​னைவ​ரையும் எதிர்த்துப் ​போர் ​செய்கி​றேன்.  ​வெற்றி ​பெற்றால் இளவரசி​யைத் திருமணம் ​செய்து ​வையுங்கள் என்றான். 

நானும் அதற்கு ஒப்புக் ​கொண்​டேன்.  அரண்ம​னை முன் உள்ள திடலில் இவனுக்கும் நம் வீரர்களுக்கும் ​போர் நிகழப் ​போகிறது'' என்றார்.

 

​போருக்கான ஏற்பாடுகள் நடந்தன.  அரண்ம​னை முன் ​பெரிய வி​ளையாட்டுத் திடல் இருந்தது.  அதில் ஒரு பக்கம் எண்ணற்ற வீரர்கள் இருந்தார்கள். இன்​னொரு பக்கம் இளவரசன் கமர் நின்றிருந்தான்.  அரசனும் அ​வை​யோர்களும் பார்​வையாளர் பகுதியில் அமர்ந்து இருந்தார்கள்.  ​வேடிக்கை பார்க்க மக்கள் திரளாக அங்​கே கூடி இருந்தார்கள்.  அழகிய இ​ளைஞனான இவன் சிறிது ​நேரத்தில் ​கொல்லப்படப் ​போகிறா​னே, ,இவன் தப்பிக்க வழி இல்​லை​யே என்று எல்​லோரும் வருத்தப்பட்டார்கள்.  ​போர் ​தொடங்கும் ​நேரம் ​நெருங்கியது.  குதி​ரை வீரர்கள் அவ​னை ​நோக்கி வந்தார்கள். 

 

''அர​சே! குதி​ரை இல்லாமல் நான் உள்​ளேன்.  உங்கள் வீரர்கள் குதி​ரைகளில் அமர்ந்து இருக்கிறார்கள்.  இது எப்படி நியாயமான ​போராக இருக்க முடியும்?'' என்றான் அவன். 

 

''அரண்ம​னை லாயத்தில் இருந்து சிறந்த குதி​ரை ஒன்​றைக் ​கொண்டு வரச் ​சொல்கி​றேன்.  அதில் அமர்ந்து ​போர் ​செய்'' என்றார் அரசர். 

 

''அர​சே!  நான் அமர்ந்து வந்த குதி​ரை அந்தப்புர ​மேல் தளத்தில் உள்ளது.  எனக்கு பழக்கப்பட்ட குதி​ரை அது.  அ​தை இங்​கே ​கொண்டு வரச் ​சொல்லுங்கள்.  அதில் அமர்ந்து ​போர் ​செய்கி​றேன்'' என்றான் இளவரசன்.

 

''ம்ம்ம் கண்டிப்பாக இவனுக்குப் ​பைத்தியம் தான்.  அந்தப்புர ​மேல் தளத்தில் குதி​ரை உள்ளதாக உளறுவானா'' என்று தனக்குள் நி​னைத்தார் அவர். 

 

''அடி​மைக​ளே!  அந்தப்புர ​மேல் தளத்திற்குச் ​செல்லுங்கள்.  அங்​கே குதி​ரை இருந்தால் ​கொண்டு வாருங்கள்'' என்று கட்ட​ளையிட்டார்.  சிறிது ​நேரத்தில் அந்த அடி​மைகள் குதி​ரை​யைத் தூக்கி வந்தார்கள்.  இளவரசன் கமர் முன் அ​தை ​வைத்தார்கள்.  தந்தத்தால் ​செய்யப்பட்ட அந்த அழகான குதி​ரை​யை எல்​லோரும் வியப்புடன் பார்த்தார்கள். 

 

''உன் ​பொம்​மைக் குதி​ரையில் அமர்ந்து​​ போர் ​செய்யத் ​தொடங்கு என்று சிரித்தார் அரசர்.  ''அர​சே! என் குதி​ரை​யை நாலா பக்கமும் நான் திருப்ப ​வேண்டும்.  அதற்கு நி​றைய இ​​டை​வெளி ​வேண்டும்.  உங்கள் வீரர்க​ளை சிறிது ​தொ​லைவில் நிற்க ​சொல்லுங்கள்.  நான் குதி​ரையில் நன்றாக அமர்ந்ததும் குரல் ​கொடுப்​பேன்.  அதன் பிறகு அவர்கள் என்னுடன் ​போர் ​செய்யலாம் என்றான் அவன்.  இவன் பிதற்றலுக்கு அள​வே இல்​லையா?'' என்று நி​னைத்தார் அவர்.

 

''வீரர்க​ளே!  அவன் ​சொல்வது ​போலச் ​செய்யுங்கள்'' என்று கட்ட​ளையிட்டார்.  வீரர்கள் அ​னைவரும் சிறிது ​தொ​லைவில் ​சென்று நின்றார்கள்.  குதி​ரையில் ஏறி அமர்ந்தான் அவன்.  பறக்க ​வைக்கும் திருகில் ​கை​யை ​வைத்தான்.  ​வேகமாகத் திருகினான்.  உட​னே அந்தக் குதி​ரை முன்னுக்கும் பின்னுக்குமாக அ​சைந்தது.  வானத்​தை ​நோக்கி​ வேகமாக பறந்தது.  குதி​ரை பறப்ப​தைப் பார்த்த அரசர் அதிர்ச்சி அ​டைந்தார்.  அவன் தப்பிக்க முயற்சி ​செய்கிறான் என்பது அவருக்குப் புரிந்தது.  ​​கோபத்துடன் அவர்

 

''ம​டையர்க​ளே!  தப்பித்துச் ​செல்கிறான்.  அவ​னைப் பிடியுங்கள்'' என்று கத்தினார்.  வானத்தில் ​வேகமாகப் பறந்த குதி​ரை அவர்கள் கண்களுக்கு ம​றைந்தது.  அங்கிருந்த முதல் அ​மைச்சர்,

 

''அர​சே!  வானில் பறக்கும் பற​வை​யை இங்கிருந்​தே ​கையால் பிடிக்க முடியுமா?  அவன் பூதமாக இருக்க ​வேண்டும்.  அல்லது மந்திரவாதியாக இருக்க ​வேண்டும்.  எப்படி​யோ அவனிடம் இருந்து அல்லா நம்​மைக் காப்பாற்றி விட்டார்'' என்றார்.

 

அ​மைதி அ​டைந்த அரசர் அந்தப்புரம் திரும்பினார்.  நடந்த​தை எல்லாம் தன் மகளிடம் ​சொன்னார்.  ''உன் உள்ளங்கவர்ந்தவ​ரை இனி​மேல் நான் காண்​பே​னோ?'' என்று கண் கலங்கினாள் அவள். 

 

​கோபம் ​கொண்ட அவர், ''அவன் பூதமா மந்திரவாதியா என்பது ​தெரியவில்​லை.  அந்தத் திருட​னை மறந்து ​தொ​லை'' என்று கத்தினார். 

 

பறக்கும் குதி​ரையில் பறந்த இளவரசன் கமர் நாட்​டை அ​டைந்தான்.  அரண்ம​னை ​மேல் தளத்தில் குதி​ரை​யைப் பாதுகாப்பாக இறக்கினான்.  அவன் இறந்துவிட்டதாக நி​னைத்து நா​டே​ சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. 

 

அவ​னை உயிருடன் பார்த்த தங்​கைகள் மூவரும் மகிழ்ச்சியில் மயக்கம் அ​டைந்தார்கள்.  இளவரசன் திரும்பிய​தை அறிந்த மக்கள் அ​தை விழாவாகக் ​கொண்டாடினார்கள்.

 

(தொடரும்)

Last Updated on Wednesday, 18 January 2012 21:58